×

திருப்பனந்தாள் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கும்பகோணம், ஏப்.15: திருப்பனந்தாள் அருகே அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டு அவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பனந்தாள் அருகே சூரியனார் கோவில் காவிரி ஆற்றங்கரையில் பரமசிவன் கோயில் பகுதியில் முகம் வீங்கிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க உடல் அழுகிய ஆண் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் மாதவன் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் திருப்பனந்தாள் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்தவர் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். உடல் அருகே விஷ பாட்டில்கள் சிதறி இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruppanandal ,
× RELATED திருப்பனந்தாள் ஒன்றியத்தில் வளர்ச்சி...